Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

மரண தண்டனை

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..




குற்றப்பத்திரிகை தாக்கலாகி

வாங்கவில்லை வாக்குமூலம்

சாட்சி விசாரணையின்றி

எழுதி வைத்த ஆயத்தத் தீர்ப்பு

உடனடி அமுல் மரண தண்டனை



தூக்குக் கயிற்றுக்கும் வேலையின்றி

நூதன முறையில் நொடியில் நிறைவேறும்

பிறக்குமுன்பே மரண தண்டனை

விசித்திரத் தீர்ப்புதான்!

பிறந்து வளர்ந்தபின் தீர்ப்பென்றால்

குடியரசுத் தலைவரிடம்

கருணைமனு சமர்ப்பிக்கலாம்

பிறவாத பெண் சிசுவால்

என் செய்ய எயலும்?

பெண் கருவறையே

பெண் சிசுவின் கல்லறையாவது

பெருங்கொடுமை தான்

முதலெழுத்தே முற்றுப்புள்ளி.

உயிரெழுத்துக்கு இடந்தர மறுத்து

ஆயுத எழுத்து வலிமையாய்ப் பயன்பட்டு

முற்றுப்புள்ளிகள் மூன்று வைக்கும்.

புதைக்கப்படுவோர்

விதைக்கப்படுவார்

இலட்சிய மரணத்தில்;

விதைகும் போதே

புதைக்கப் படுகிறார்

இங்கு மட்டும்.

அமுதம் வருமுன் பாற்கடலில்

ஆலகாலம் வந்தது போல்

பாலமுதம் சுரக்குமுன்

நஞ்சு கிடைக்கிறது பெண் சிசுவுக்கு.

                                          -சி. விநாயகமூர்த்தி-

நன்றி புதிய பெண்ணியம் சமூக அறிவியல் தமிழ் பண்பாட்டு இனைய இதழ் 

கவிதை தொடுப்பு 

தொடர்புள்ள இடுக்கைகள் 
மரண தண்டனை
பெண்ணே புது அத்தியாயம் படை...
தூசானது நினைவுகள்
ஹிஜாப் தரும் சுதந்திரம்!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துரைகள்:

Post a Comment

குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.

பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan

Blogger Widgets