Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி! ! ! !


பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி! ! ! !

. . . . . . . . . . . .இதனை முழுமையாக படிக்கவும். படித்த பின் இதனை
மற்றவர்களுக்கும் அதிகம் தெரியப்படுத்தவும் முடிந்தால் ஷேர் பன்னவூம். . . . . . . . . . . .

1898 ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மம்மி 3000 ஆண்டு பழமை மிக்க அன்றைய எகிப்தை ஆண்டு வந்த இரண்டாம் ரம்சீஸ் என்ற ஃபிர்அவ்னின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. தொல் பொருள் ஆராய்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளித்து வந்த ஃப்ரான்சு நாடு அந்த உடலை ஆராய்ச்சி செய்வதற்காக எகிப்திடம் கேட்டு வாங்கியது.

மருத்துவ அறிவியல் துறை ஆய்வாளரான டாக்டர் மோரிஸ் புகைல் தலைமையிலான குழு அவ்வுடலை ஆய்வுக்கு உட்படுத்தியது. உடலில் படிந்திருந்த உப்பின் துணிக்கைகளை வைத்து இது கடலில் மூழ்கி இறந்தது என்ற முடிவுக்கு வந்தனர். ஆய்வின் முடிவில் அவ்வுடல் மூவாயிரம் ஆண்டு பழமையான எகிப்தை ஆண்ட மன்னனின் உடல் என்று கண்டறியப்பட்டது ! அந்நேரம் பாதுகாக்கப்படுவதாக இறைவன் வாக்களித்திருக்கும் ஃபிர்அவ்னின் உடல் பற்றிய பேச்சு சிந்தனையாளர்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது. இது பற்றிய செய்தி மோரிஸ் புகையின் கவனத்துக்கும் வந்தது. 1898 ல் கண்டெடுக்கப்பட்ட மம்மியைக் குறித்து 1400 வருடங்களுக்கு முன்பே கூறப்பட்டதா? இது எப்படி சாத்தியமாகும்? என்று சிந்தனை செய்தார் மோரிஸ் புகைல்.

சிந்தனையில் மோரிஸ் புகைல்!

திருக்குர்ஆன் கடலில் மூழ்கி இறந்த பின்னர் ஃபிர்அவ்னின் உடல் பாதுகாக்கப்படும் என்று பிரகடனம் செய்கிறது.
தோரா மற்றும் பைபிளின் பழய ஏற்பாடும் மோசேயின் காலத்தில் இஸ்ரவேலர்களைக் கொடுமைப் படுத்திய பர்வோன் மன்னனைப் பற்றியும் இறுதியில் அவன் கடலில் மூழ்கி இறந்தான் என்றும் கூறுகிறது. இதோ என் முன்னாலிருப்பது அக்காலத்தில் இறந்து விட்ட உடல் அல்லவா?
 என் ஆராய்ச்சியின் மூலம் நான் அறிந்திருக்கும் முடிவை 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது (ஸல்) எவ்வாறு அறிந்து கொண்டார்கள்?
பைபிளில் தேடினார்மோரிஸ் புகைல். பர்வோன் மன்னனின் முடிவைப் பற்றி யாத்திராகமம் இவ்வாறு கூறுகிறது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

நிறக்குருடு (Color blindness)

நிறக்குருடு

நம் நாட்டில பல மூட நம்பிக்கைகள் பற்றி பேசப் படுகின்றன அவற்றில் காலை  சிவப்பு நிறத்தைப் பார்த்தல் கொபம் அடையும் என்பதும் , சிவப்பு துணி அணிந்து இருப்பவர் எதிர்ப் பட்டால் துரத்தும் என்பதும் ஓன்று .

 உண்மையா? என்றால் உண்மை இல்லை என்பதுதான் உண்மை.

பொதுவாக கால் நடைகளுக்கு சிவப்பு ,நீலம் ,கருப்பு என்று பிரித்துப்பார்க்கத் தெரியாது.

ஏன் என்றால் அவைகளுக்கு நிறக்குருடு (Color blindness) அதனால் தான் அவற்றிற்க்கு எல்லா நிறமும் ஒரே மாதிரித்தான் தெரியும் .

ஸ்பெயினில் நடை பெரும் புள் பைட் (Bull Fight) எனப்படும் காளை  விளையாட்டில் சிவப்புத்துணியை காட்டித்தான் வெறி ஏற்றுவர்.

ஆனால்  இந்த சிவப்பு நிறத்தைப் பார்த்து ஆத்திரப் பட்டு காளை பாய்வது இல்லை.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

ஸ்ட்ரோபரி சான்விட்ச்



தேவையான பொருட்கள் 

பிரட்  துண்டுகள் (Bread)  - 04
வாழைப்பழம் - 01 (நறுக்கியது)
மாதுளை விதைகள் - 03 Table Spoon
ஆப்பிள் (Apple) - 01
அன்னாசி ஜாம் - 1/2 Cup
உப்பு - தேவையான அளவு
சாட் மசாலா  - 01 Tea Spoon
வெண்ணை - 01 Tea Spoon
மிளகுத்தூள் - 01 Tea Spoon
ஸ்ட்ரோபரி   - 03 or 04

செய்முறை 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

உலக முஸ்லிம்கள் உயிராய் நினைக்கும் முஹம்மத் யார் இவர்?

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

 இறுதிதூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்களை  இஸ்லாமிய மக்கள் ஏன் இவ்வளவு விரும்புகிறார்கள்? யார் இவர்? அப்படி என்ன நற்பண்புகள் தான் அவரிடத்தில் இருந்தது?  இக்கேள்விகளுக்கான  விடையே உங்கள் கையில் இருக்கும் இந்த வெளியீடு...

சிறிது நேரம் ஒதுக்கி முழுமையாக படியுங்கள்... இதை படித்து முடிக்கும் போது "இவர் ஏன் சிறந்தவர்" என்ற கேள்விக்கு உங்கள் மனம் சரியான விடை சொல்லும் (இறைவன் நாடினால்)...

நேர்மை :

இவர் ஒரு நம்பிக்கையாளர், உண்மையாளர் என்று இவரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட கூறும் அளவிற்கு நற்பெயர் பெற்றிருந்தார்கள். அரசு கருவூலத்தில் இருக்கும் ஒரு துண்டு பேரிச்சை பழத்தை தனது பேரன் வாயில் போட , இறைத்தூதரோ பதறிப் போய் வாயில் இருந்து பேரிச்சையை வலுக்கட்டாயமாக துப்ப வைத்து "அரசு பணத்தில்  எதுவும் நமக்கு சொந்தமானது அல்ல" என்று கூறினார்கள்.   கருவூலத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனச் சொல்லும் ஆட்சியாளரை காண முடியுமா நம்மால்?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

விஸ்வரூபம் திரைப்படம் குறித்த ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

விஸ்வரூபம் திரைப்படம் குறித்த ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு

கமல் ஹாஸன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் திரைப்படம் உலகளாவிய முஸ்லிம் மக்களிடம் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்தமையை அடுத்து, இந்தியாவின் தமிழகம், பெங்களுர், ஹைதராபாத் உள்ளிட்ட மாநிலங்களிலும், சிங்கப்பூர், மலேசியா, பஹ்ரைன், குவைட், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கடார் உள்ளிட்ட பல நாடுகளிலும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விஸ்வரூபத்தை இலங்கையிலும் தடை செய்ய வேண்டும் என்று நாம் கோரிக்கை வைத்ததனை அடுத்து முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாய் தற்காலிக தடையுத்தரவினை இலங்கை அரசு அறிவித்ததோடு, முஸ்லிம் புத்தி ஜீவிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் பார்வைக்குப் பின் வெளியீடு குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.

இதற்கமைவாக கடந்த 29-01-2013 அன்று இரவு 7.00 மணி முதல் 9.30 மணி வரை இத்திரைப்படம் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய புத்தி ஜீவிகள், இயக்கப் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பார்வைக்கு விடப்பட்டது. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஜமாத்தின் துணை தலைவர் மவ்லவி பர்சான் மற்றும் ஜமாத்தின் துணை செயலாளர் மவ்லவி ரஸ்மின் ஆகியோர் திரைப்படத்தை பார்வையிட்டார்கள்.

இத்திரைப்படத்தினை பார்வையிடுவதற்கு முன்னால் எங்களிடம் இத்திரைப்படம் குறித்து என்ன மனப்பதிவு காணப்பட்டதோ, அந்த மனப்பதிவு பார்வையிட்டதன் பின்பு முன்பிருந்ததை விட எதிர்ப்பு மனப்பான்மையை அதிகரிக்கச் செய்துள்ளதே தவிர கிஞ்சிற்றும் தணிவடையச் செய்யவில்லை என்பதை அழுத்தமாய் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றோம். தமிழ் திரைப்பட வரலாற்றில் ஆங்காங்கே அவ்வப்போது முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் சீண்டி சில திரைப்படங்கள் வெளியிடப்பட்ட போதிலும் மொத்தமாய் இஸ்லாமிய எதிர்ப்புணர்வை சமுதாய மன்றில் விதைக்கும் திரைப்படமாகவே விஸ்வரூபத்தை அடையாளப்படுத்தப்பட வேண்டியுள்ளது. அதுமட்டுமன்றி, ஜிஹாத் மற்றும் இஸ்லாம் குறித்த தவறான புரிதலை மாற்றுமத அன்பர்கள் அகங்களில் தோற்றுவிக்க முனைந்திருப்பதோடு, முஸ்லிம் விரோத எதிர் மறை உணர்வை சமூக தளத்தில் விதைப்பதாகவும் இத்திரைப்படம் அமைந்துள்ளது.

ஏலவே நீருபூத்த நெருப்பாய் இனமுறுகள்கள் அதிகரித்து வரும் தருணத்தில் முஸ்லிம்கள் குறித்த மூன்றாம் தரப் பார்வையை பேரின சமுதாயத்தவர் மத்தியில் இத்திரைப்படம் விதைக்குமாயின் அதன் எதிர் வினை பாரிய அதிர்வுகளாய் முடியும் என்பதை கருத்திற் கொண்டும், இந்நாட்டின் சட்ட ஒழுங்கும், சமுதாய நல்லிணக்கமும் ஒரு கூத்தாடியின் திரைப்படக் காட்சிகளினால் சீர்குலைந்து விடக் கூடாது என்பதனையும் சிந்தையிற் கொண்டு விஸ்வரூபம் திரைப்படம் முற்று முழுதாக இலங்கையில் தடை செய்யப்பட வேண்டும் என்ற எமது கோரிக்கையை உங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். அத்தோடு, நாம் இவ்விறுதி முடிவை எட்டுவதற்கு ஏதுவாக அமைந்த கராணங்களையும் உங்கள் கவனத்திற்கு அறிக்கையாய் சமர்ப்பிக்கின்றோம்.

விஸ்வரூபம் ஏன் தடை செய்யப்பட வேண்டும்?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதா? உஸ்மான் (ரலி) அவர்களால் தொகுப்பட்ட பிரதிதானே தற்போதுள்ள குர்ஆன்?.


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக
ஒற்றுமை எனும் இணையதளத்தில் இருந்து பெற்ற ஆக்கம்....

 கேள்வி எண் 1.
குர்ஆனின் பல பிரதிகள் உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில்; உஸ்மான் (ரலி) அவர்களால் எரிக்கப்பட்டது. குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதல்ல. மாறாக உஸ்மான் (ரலி) அவர்களால் தொகுப்பட்ட பிரதிதானே தற்போதுள்ள குர்ஆன்?.

பதில்:

இஸ்லாத்தின் மூன்றாவது கலிபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் ஒன்றுக் கொன்று முரண்பட்ட பல குர்ஆனின் பிரதிகளை தொகுத்து ஒரே குர்ஆனாக உருவாக்கப் பட்டதுதான் இன்றைய அருள்மறை என்பது, குர்ஆனை பற்றி உலவுகின்ற கட்டுக்கதைகளில் ஒன்று. எந்த அருள்மறை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டதோ அதே அருள்மறைதான், இஸ்லாமிய உலகத்தினரால் பெரிதும் போற்றி மதிக்கப்படும் அல்லாஹ்வின் வேதமாக இன்றும் இவ்வுலகில் திகழ்கின்றது. இன்றைக்கு இருக்கும் அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட ஒன்று. கட்டுக்கதைக்கான ஆணிவேர் எது என்று நாம் இப்போது ஆய்வு செய்வோம்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் QatarYP

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

மீண்டும் ஒரு இணையதளத்துடன் இன்றைய இனையதளம் பகுதியில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்

சென்ற பதிவில் கணனி பாவிப்பவர்களுக்கு மிகப் பயனுள்ள ஒரு இணையதளத்தை பற்றி பகிர்ந்து கொண்டேன் 

அந்த வரிசையில் ஒரு இணையதளத்தை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கின்றேன்

மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக Qatar ரில் வேலைக்கு செல்ல எண்ணி இருப்பீர்கள் அப்படியாயின் உங்களுக்கு இந்த தளம் பிரயோசனமாக இருக்கும் என்று நினைகின்றேன்

அந்தததளத்தின் பெயர் QatarYP

தளத்திற்குள் சென்று What எனும் கட்டத்தில் Click பண்ணியதும் அதில் 750 இறக்கும் மேற்பட்ட துறைகள் இருக்கின்றது அதில் உங்களுக்குத்த் தேவையான துறையை தெரிவு செய்து Where எனும் கட்டத்தை Click பண்ணி என்ன இடத்தில் வேண்டும் என்பதை தெரிவு செய்து Search கொடுத்தல் சரி


அந்த துறையில் உள்ள Qatar இன் முன்னணி நிறுவனங்களின் பெயர் மற்றும் Web Address மற்றும் தொடர்பு எண்களை  இத்தளம் தரும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இலவசமாக Online Live TV ஒன்றை உருவாக்குவோமா ?

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

இலவசமாக  நேரடி ஒளிபரப்புச் செய்யும்  Online Live TV ஒன்றை உருவாக்குவோமா ?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல்சுவை வலைப்பூவில் எப்படி இலவசமாக Online Radio உருவாக்குவது என்ற பதிவை பதிந்து இருந்தேன்

அந்த வரிசையில் இன்று  உங்களுக்கு ஒரு நேரடி ஒளிபரப்புச்செய்யும்  Online Live TV யை உருவாக்குவது பற்றி உங்களுக்குச் சொல்லலாம்  என்று எண்ணு கின்றேன்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இந்திய கையடக்கத் தொலை பேசிகளுக்கு இலவசமாக SMS அனுப்புவது எப்படி?

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

இந்திய கையடக்கத் தொலை பேசிகளுக்கு இலவசமாக SMS அனுப்புவது எப்படி?

இந்தப்பதிவு   இந்தியாவில் உள்ளவர்களுக்கு மிகப் பயனளிக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

இலங்கையில் இருந்து ஏதாவது ஒரு இந்தியத்தொலை பேசி இற்கு ஒரு SMS அனுப்புவதற்க்கு இலங்கை ரூ : 6.00 + text அரவிடுறாங்க.

 இதனால் இலங்கையில் இருந்து இந்தியாவிற்க்கு ஒரு SMS அனுப்புவதாயின் ஒரு SMS இற்கு  அண்ணளவாக 7 ரூபாய் செலவிட வேண்டும்.

ஆனால் இந்தப்பதிவின் பிறகு அவ்வளவு பணம் செலவு செய்ய தேவை இல்லை.

பணமில்லாமல் SMS அனுப்ப தற்பொழுது ஒரு இணையத்தளம் உதவுகின்றது

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0
Blogger Widgets